Your comments

Tuesday, March 8, 2011

சரிதானே .. இதிலென்ன தவறு ?! ....

கஸ்ஸாலி இமாமவர்கள் அறிவை இரண்டு வகையாகப் பிரிக்கின்றார்கள். உலக அறிவு , மறுமையின் அறிவு என்று . மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் சரிதானே .. இதிலென்ன தவறு என்பார்கள் . ஆனால் கஸ்ஸாலி அதற்குக் கூறும் வியாக்கியானத்தைப் பாருங்கள்...
சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் ........மெஞ்ஞான அறிவான இவ்வறிவைக் கற்காது புறக்கணிப்பவர்கள் மறுமையில் அரசருக்கெல்லாம் அரசனான அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாகி அழிந்துவிட(நரகம் செல்ல)வேண்டியேற்படும் என்று கஸ்ஸாலி சொல்கின்றார்கள்..  (இஹ்யாஉலூமுத்தீன் பக்கம்1-114)
·         ஷரீஅத் - (மார்க்கம் .)
·         தரீக்கத் -- ( ஆன்மீகப் பயிற்சி பெறல்)
·         ஹக்கீக்கத் -- ( யதார்த்தத்தை அறிதல் )
·         மஃரிபத் -( மெஞ்ஞான முக்தியடைதல் )
என இவர்கள் இஸ்லாத்தை நான்காக வகுத்திருப்பதை அறிந்து கொள்ள முடியும்
இவ்வாறு முதல்க் கட்டமாக இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ள வந்த எதுவுமறியா அப்பாவி முஸ்லிமை அழைத்து அவனுக்குக் குழையடித்து , மூளையைச் சலவை செய்து இவ்வாறான ஷைத்தானிய சிந்தனைகளை ஊட்டி அவர்களைத் தமது தரீக்காவுக்குள்(தரீக்கத்துன்நார் - நரகத்துகின் பாதை என்பதே மிகப் பொருத்தம்) அழைத்துச் செல்கின்றனர் . இனி அங்கே என்ன நடைபெறுகின்றது என்று பார்ப்போம்.
தரீக்கத் الطريقة
ஒரு ஷைக்கிடத்தில் பைஅத்செய்து அவர்சொல்லும் வழியில் நடை பயில்வதை இவர்கள் தரீக்கத் என்றழைக்கின்றனர் . அதாவது ஒரு ஆத்மீகப் பயிற்சி பெறும் சீடர் தனது உணர்வுகள் , புலன்களையெல்லாம் மரணிக்கச் செய்யுமளவு தன்னைச் சிரமத்துக்குள்ளாக்கி தன்னைத்தானே வருத்தி 'அதஹ்' எனும் பைத்தியம் போன்ற சுய நினைவிழந்த நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும் . இதற்கான பயிற்சிகளை அந்த தரீக்காவின் ஷைக்கே முன்னின்று சொல்லிக் கொடுப்பார் .
இது பற்றி கஸ்ஸாலி இவ்வாறு கூறுகின்றார் ...
'
தரீக்கத்தினை அடைவதற்கு கல்வத் (தனித்திருத்தல்) , ஜூஉ (பசித்திருத்தல்), ஸஹர்(விழித்திருத்தல்), ஸூம்து மௌனமாயிருத்தல்) போன்றன அவசியமாகும் . ( இஹ்யாஉலூமுத்தீன்2-243)
அத்துடன் தனது உடலைத் தானே சிலவேளை வதைத்துக் கொள்ளவும் வேண்டும் . இதற்காக நீண்ட நேரம் ஒற்றைக் காலில் நிற்றல் , தலைகீழாக நிற்றல் , முள்ளின் மீது அமர்தல் ,நெருப்பால் உடலைப் பொசுக்கல் போன்ற பயிற்சிகளையும் ஷைக்கானவர்மேற்கொள்வார் .
'
ஒரு (முரீது) சீடனானவன் தனது ஷைக்கின் அனுமதியின்றி இவன் (தன்மனைவீயுற்பட)எவரிடமும் தொடர்பு கொள்வதோ, குர்ஆன்ஓதல், திக்ர் , அறிவைத்தேடல் போன்ற எவற்றிலுமோ ஈடுபடக் கூடாது .(அல் அன்வாருல்குத்ஸிய்யா1-187)
ஷைக்றிபாயிஃகூறுவதைப்பாருங்கள் .
ஷைக் செய்யும் எந்தவிதமான மோசமான காரியங்களையும் கண்டு அதைக் கண்டிக்கக் கூடாது . ஒரு முறை இப்படித்தான் ஒரு ஷைக்கின் வீட்டுக்கு அவரது முரீதானவர் சென்ற போது தனது ஷைக் ஒரு அழகிய பெண்ணிடம் சல்லாபித்து ,அவளைக் கட்டிப்பிடித்து , முத்தமிட்டு உடலுறவில் ஈடுபட்டிருக்கக் கண்டார். இதைக் கண்டதும் அதிர்ச்சியுற்ற அவர் அவசரப் பட்டு 'என்ன காரியம் பண்ணிவிட்டீர்'!! என ஷைக்கைக் கண்டித்து விட்டார்..உடனே அவர் ஷைக்கிடமிருந்து கற்ற அனைத்து நெறிகளும் அவரிடமிருந்து அந்த இடத்திலேயே பறிக்கப்பட்டுவிட்டன.  (நூல்:கிலாததுல்ஜவாஹிர்;பக்கம்:278)
பிரபலஸூபி..இப்னுஅஜீனா...கூறுகின்றார் ...ஷைக்குக்கு சிஷ்யன் செய்யும் மரியாதை யாதெனில் அவன் ஷைக்கின் கைகளையும் கால்களையும் முத்தமிட வேண்டும் . அவரின் முன் இருக்கும் போது தலை தாழ்த்தி வாய்மூடியிருக்க வேண்டும் . முரீதுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டு விட்டால் அவனது மனக்கண் முன் ஷைக்கை முன்னிறுத்தி அவரிடமே தனது நோயை நீக்குமாறு முறையிட வேண்டும் . ஏனெனில் இவ்வாறு செய்தால் அல்லாஹ்வின்உதவியால் சந்தேகமின்றி நிச்சயம் சுகம்கிடைக்கும் . . (புதூஹாத்துல் இலாஹிய்யா : 308-309)வழிகெட்ட ஸூபி ஸஃரானி சொல்வதைக் கேளுங்கள் ....
ஷைக்கின் கப்ரைத் தரிசிக்கச் சென்றால் அவர் மய்யித் , மரணித்து விட்டவர், நாம் பேசும் எதையும் செவியுற மாட்டார் என எண்ணிவிடக் கூடாது . எனினும் அவர் திரையுலகில் உயிருடன் இருப்பதாகவே நம்ப வேண்டும் . அப்போதுதான் அவரது பரக்கத் - அருளைப் பெற முடியும் . ஏனெனில் முரீதானவர் ஷைக்கின் கப்ரை ஸியாரத் செய்து அல்லாஹ்வை திக்ர் செய்தால் அந்த ஷைகும் கப்ரில் எழுந்து உற்கார்ந்து கொண்டு இவருடன் திக்ர் செய்கின்றார் . இதை நாங்கள் பல தடவைகள் நேரடியாகவே கணகளாலேயே பார்த்திருக்கின்றோம் . (அன்வாருல் குத்ஸிய்யா 1-169)
இது போன்ற ஸூபித்துவ வாதிகளின் தரீக்கத் விதிகளையும் நிப ந்தனைகளையும் அபத்தமிக்க பைத்தியகாரத்தனமான இஸ்லாத்திற்கு முறணான , இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்தெறியக்கூடிய கதைகளையும் புராணங்களையும் லட்சக்கணக்கில் ஸூபித்துவ நூல்களில் நீங்கள் காணலாம் . மிகக் குறைந்தளவு இஸ்லாமிய அறிவுடைய ஒரு பாமரன் கூட இக்கருத்துக்கள் இஸ்லாத்தைத் தகர்க்கக் கூடிய மிகப் பெரிய வெடி குண்டு , இதற்கும் இஸ் லாத்துக்கும் எள் முனையளவு கூட சம்பந்தம் கிடையாது என்பதை அடித்துச் சொல்வான் என்பது மட்டும் உண்மை .
சுருக்கமாகச் சொல்வதாயின் ஸூபிகளின் தரீக்கத் எனும் இந்த மாயையின் பின்னணியில் ஒரு பெரிய சதிவலையே பின்னப்பட்டிருக்கின்றது . அதாவது அப்பாவிப் பாமரர்கள் மத்தியில் தம்மை விலாயத் பெற்ற இறை நேசச் செல்வர்கள் , ஷைக்மார்கள் என அறிமுகப்படுத்தி அப்பாமரர்களை இஸ்லாத்தின் பெயரைக் கூறி ஏமாற்றித் தமது சீடர்களாக்கி ஆத்மீகம் எனும் பெயரில் பொய்களையும் புருடாக்களையும், அதிசயமிக்க கற்பனைச் சம்பவங்களையும் கூறி மூளைச்சலவை செய்து தன்னைப் பின் பற்றாவிட்டால் வழி கேட்டில் வீழ்ந்து நரகத்துக்குத்தான் செல்ல வேண்டும் எனும் அளவுக்குப் பயமுறுத்தி தாமும் வழி கெட்டு எதுவுமறியா அப்பாவி மக்களையும் வழிகெடுக்கும் ஒரு ஷைத்தானிய ஊடகம் தான் இந்த தரீக்கத் ஆகும். இதை விட முக்கியமான பயங்கர விடயம் யாதெனில் இந்தத் தரீக்கத் வாதிகள் அனைவரினதும் மிக முக்கிய குறிக்கோள் யாதெனில் இஸ்லாத்தையே அழித்து இடித்து வீழ்த்திவிடக் கூடிய இரு கொள்கைளின் பக்கம் தம் சீடர்களை அழைத்து அவற்றைப் போதித்து அதன் மூலம் சுய லாபம் தேடுவதே இவர் களின் அடிப்படை நோக்கமாகும். அவையாவன... 1- வஹ்தத்துல் வுஜூத் - அத்வைதக் கொள்கை -அதாவது படைப்பினங்களான நாமும் படைத்தவனான அல்லாஹ்வும் ஒன்றுதான். ,அவன்தான் பல வடிவங்களில் இப்பிரபஞ்சமாகவும், அதிலுள்ள வஸ்த்துக்களாகவும் காட்சி தருகின்றான் எனும் கொள்கை .
2-
அல்ஹூலூல் வல்இத்திஹாத்: அதாவது இறைவன் படைப்பினங்களின் மீது இறங்கி சஞ்சரிக்கின்றான் பின் இறண்டறக் கலந்து விடுகின்றான் எனும் இந்துத்துவ , கிருஷ்த்தவக் கொள்ளை .
அல்லாஹ் கூறுகின்றான் ...

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلاَّ إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ المائدة (73)
'
அல்லாஹ் மூன்று கடவுள்களில் மூன்றாவது கடவுளெனக் கூறிய (அதாவது அல்லாஹ் இயேசுவிலும் அவர் தாயிலும் இறங்க அவர்களும் கடவுளாகி விட்டார்கள் எனக் கூறிய கிருஷ்த்தவர்கள்) காபிர்களாகி விட்டார்கள் . ( உண்மைக் ) கடவுள் ஒரே கடவுளேயன்றி வேறில்லை . அவர்கள் தாம் சொல்வதை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் அவர்களில் ( இக் கொள்கை மூலம் ) காபிர்களாகி விட்டவர்களை கடுமையான வேதனை பிடித்துக் கொள்ளும் . அவர்கள் அல்லாஹ்விடத்தில் (தமது இக்கொள்கையை விட்டு விட்டு ) தவ்பாச் செய்து பாவ மீட்சி பெற வேண்டாமா ? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனுமாகஇருக்கின்றான். . (அல்குர்ஆன் : மாயிதா 73 . ) எனவே சூபிகள் உருவாக்கிய தரீக்கத் எனும் ஷைத்தானியக் கோட்டையிலே ஷைக் எனப்படுபவர்தான் அல்லாஹ்வின் அனைத்து ஆற்றல்கள் , சக்திகள், வல்லமைகளும் பெற்றவராகக் கருதப்படுவார். அவரின் சீடர்களுக்கு அவர் குருநாதர் மாத்திரமல்ல கடவுளும் அவர்தான் . ஷைகுக்கு தெய்வீகத் தன்மைகள் - கடவுளின் சக்திகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளாத சிஷ்யன் நிச்சயமாக உண்மையான வெற்றிப் பாதையை அடைந்து கொள்ள மாட்டான். வெற்றிப் பாதையெனப்படுவது இவர்களிடத்தில் வஹ்தத்துல் வுஜூத்- கண்ணால் காண்பதெல்லாம் கடவுளே .. எனும் கொள்கையைக் குறிக்கும். ஆம் நரகத்துக்குரிய இலவச நுழைவுச் சீட்டை வென்று தரும் பாதை இதுதான் .. சந்தேகமேயில்லை . தனது ஷைக் கடவுளின் வல்லமைகள் பெற்றவர்,சக்திமிக்கவர் என எண்ணும் சீடனுக்குக் காலப் போக்கில் 'ஜத்பு ' (பைத்தியம் போன்ற சுய நினைவற்ற) நிலை ஏற்படும் .அதன் பின் அவன் தனது ஷைக்கையே கடவுளாகக் காண்பான் என்பதே தரீக்கத் போதிக்கும் தத்துவ மாகும்.---- From the Article of  Mohamed Jaleel Madhani

இப்படிப்பட்ட வழிகெட்ட, இஸ்லாத்திற்கு புறம்பான தரீகத்தைதான்  பீரப்பா  அவ்லியாவும் .......(?!) தனது................ஞானப்புகழ்ச்சி பாடல்களில் பாடி  வைத்துள்ளார்  .... ஆதாரம் இதோ  


 
தக்க ஷரீஅத்தும் தரீகத்ததும் 
தழும் பொன் றணுகாத   ஹகீகத்தும்
மிக்க முஹப்பத்தும்  மகுரிபத்தும் ....... ஞானப்புகழ்ச்சி - 156   
ஆதியை அறிய வேண்டில் அழகிய நிலைமை நாலாம்
ஓதிய ஷரீஅத் தென்றும் உவந்திடு தரீக்கத்தென்றும்
 நீதி சேர் ஹகீகத் தென்றும் நெறியுள்ள மஃரிபத்தால்
ஆதியைக் காணலாமென் றகுமதர் அருளிச் செய்தார்.
(ஞான மணிமாலை, பாடல் 11).

ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் எனும் நான்கு நிலைகளின் ஊடாகத்தான் இறைவனை அறிய முடியும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே கூறியுள்ளதாக, பீரப்பா பாடுகின்றார்.

மக்களும் நன்மை என நினைத்து அர்த்தம் தெரியாமல் (குறிப்பாக நான் சார்ந்துள்ள தக்கலை அபீமுஅ ஜமாஅத் மக்கள்) விடிய விடிய கண் விழித்து  பக்தியுடன்   பாடுகிறார்கள்  இந்த அறியாமையிலிருந்து, சிந்தனை சிறையிலிருந்து விடுபட எல்லாம்   வல்ல அல்லாஹ்வை பிராத்திப்போம்

No comments: