Your comments

Friday, October 7, 2011

ஜமாஅத்துக்கு ஒரு கடிதம்.... அநியாயமான, முறையற்ற நடவடிக்கை..... ?!



தவ்ஹீது மற்றும் தர்ஹா விஷயம் பற்றி நான் பேசியதால் ன் நடவடிக்கை எடுக்ககூடாது என என்னிடம் விளக்கம் கேட்டு 08.08.2010 தேதியிட்ட ஜமாஅத் கடிதம் ஒரு சகோதரி (?!)  மூலம்  என்னிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தார்கள்  இது ஒரு  தவறான , முறையற்ற ஏற்பாடு என ஏனோ அவர்களுக்கு விளங்கவில்லை! அக்கடிதம் 12.08.10  அன்று என் கையில்  அந்த சகோதரி மூலம் கிடைத்ததுஅவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதாவது கடிதம் கிடைத்த ஏழு தினங்களுக்குள் என்னுடைய 13.08.10  தேதியிட்ட கடிதம் விளக்கம் என் உறவினர் மூலம் கொடுக்க ஏற்பாடு செய்தபோது அப்போதைய செயலாளர் வாங்க மறுத்து பின்னர் ஒருவழியாக பெற்றுக் கொண்டார்கள்ஆனால் கொடுக்கப்பட்ட என் விளக்க கடிதத்தை  உதாசீனப்படுத்தி விட்டு காலக்கெடுவுக்கு முன்பாகவே  அவர்கள் ஏற்கனவே முடிவு  செய்தபடி  ஜும்மா பள்ளியில் என்னையும் என் குடும்பத்தாரையும் ஊர் விலக்கம்  செய்த  அறிவிப்பை  ஓட்டினார்கள்அதிகாரப் பூர்வமாக  இன்று வரை எனக்கு அறிவிக்கப் படவில்லை.எனது  உறவினர்கள்  மூலமாகவே  நான் அறிய  நேர்ந்தது  - இது  இந்த தக்கலை அபீமுஅ ஜமாஅத் செய்த அநியாய நடவடிக்கைதட்டிக் கேட்க  ஜமாஅத் மக்கள் ஏனோ முன் வராததால் இந்த அடாவடித்தனம்  இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது....... நான் ஜமாஅத்துக்கு  எழுதி அனுப்பிய  40 பக்க விளக்க கடிதம் கீழ்காணும் picture மேல் கிளிக்  செய்து அறிந்து கொள்ளலாம்....

இதில் நம் சமுதாயத்தில்  இதுவரையிலும் கவனிக்கபடாத விஷயங்கள் , மற்றும் மிகவும் தேவையான செயல்பாடுகள்  என  நல்ல பல கருத்துக்களை  நன்மை நாடி   பதிவு செய்துள்ளேன்....Please click on the below picture ....
.. 
  
இந்த கடிதம்  பற்றிய மக்கள் கருத்துக்கள் ..
அனைத்தையும் படிக்க ... கீழேயுள்ள லிங்க் ஐ சொடுக்குங்கள்   
 http://www.blogger.com/comment.g?blogID=8653878347019615273&postID=8671362001725330781&isPopup=true

No comments: